7
ராஜபாளையம் அருகே ஒரு லட்சம் மதிப்பில் குளம் தூர்வாறும் பணியை சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்!
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே சங்கம்பட்டி கிராமத்தில் உள்ள ஊரணியை தூர்வாருவதற்க்கு அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்த நிலையில், தமிழக முதல்வரின் குடிமராமத்து பணி திட்டத்தின் கீழ் சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் இராஜவர்மன் பூமி பூஜை செய்து கொடியசைத்து பணிகளை துவக்கி வைத்தார்.
உடன் மாவட்ட கவுன்சிலர் வேல்முருகன், ஒன்றிய கவுன்சிலர்கள் கந்தகிருஷ்ணகுமார், மாடசாமி, உள்ளிட்ட கழக நிர்வாகிகள் மற்றும் அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர், வி. காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.