யாசகம் எடுத்த பணத்தை இரண்டாவது முறையாக கரோனா நிவாரண நிதியாக கொடுத்த நபர்

தூத்துக்குடி ஆலங்கிணறு பகுதியை சேர்ந்த  பாண்டி. தற்போது மதுரை பகுதியில் பிச்சை எடுத்து வருகிறார்.மதுரை மாட்டுத்தாவணி பகுதியில் யாசகமாக பெற்ற ரூ.10 ஆயிரத்தை கடந்த மே.18ம் தேதிமதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வழங்கியிருந்தார். மேலும் 15 நாள்கள் கழிந்த நிலையில் தற்போது தான் யாசகமாக பெற்ற ரூ.10 ஆயிரத்தை இரண்டாம் முறையாக மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தார். இவருக்கு பொது மக்கள் பாராட்டுக்கள் தெரிவித்தனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

புனித ரமலான் வாழ்த்துக்கள்..