10
தமிழகம் முழுவதும் கொரோனா தாக்கத்தினால் பொதுமக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டு சிரம்ப்பட்டு வருகின்றனர். இதனால் பொதுமக்களுக்கு பல்வேறு அரசியல் கட்சி சார்பில் நிவாரன பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.இந்நிலையில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பேரையூர் ரோட்டில் அமமுக சார்பில் கொரோனா ஊரடங்கால் வேலையிழந்து தவிக்கும் சலவை தொழலாளர்களுக்கு நிவாரண பொருட்களாக அரசி,கோதுமைகளை அமமுக மதுரை புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் மகேந்திரன் தலைமையில் நகர செயலாளர் குணசேகர பாண்டியன் வழங்கினார்.
இதில் சமூக இடைவெளியை பின்பற்றி சலவை தொழிலாளர்கள் நிவாரன பொருட்களை பெற்றுச் சென்றனர். இதில் அமமுக நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.இந்நிகழ்ச்சியில் ஒன்றியக் கவுன்சிலா் அலெக்ஸ்பாண்டி துணை சோ்மன் மலேசியா பாண்டி உள்பட பலா் கலந்து கொண்டனா்.
உசிலை சிந்தனியா
You must be logged in to post a comment.