செங்கம் அருகே பயங்கரம்:இரு சக்கர வாகனங்கள் மோதி மூவர் படுகாயம்!

செங்கம் குப்பநத்தம் சாலையில் இருசக்கர வாகனங்கள் மற்றும் சைக்கிள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது இதில் பயணித்த மூவரும் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை.

திருவண்ணாமலை மாவட்டம் ,செங்கம் குப்பநத்தம் சாலையில் உள்ள ராஜிநகர் அருகே இரண்டு இருசக்கர வாகனங்கள் மற்றும் சைக்கிள் ஆகியவைகள் நேருக்கு நேர் மோதியதி விபத்துக்குள்ளானது. இதில் பயணித்த மூவரும் உயிருக்கு ஆபத்தான நிலையில் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

மேலும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் விபத்தில் சிக்கியவரை தீயணைப்பு மற்றும் மீட்புபணி வாகனத்தில் மீட்புப் பணியாளர்கள் மீட்டெடுத்து அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு எடுத்துச் சென்றார்கள். இதனை தொடர்ந்து விபத்து குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். இந்த விசாரணையில் செங்கம் அடுத்த குப்பநத்தம் பகுதியை சேர்ந்த முருகன் (வயது.50) என்பவரும் அருகிலுள்ள பரமனந்தல் பகுதியை சேர்ந்த மாணிக்கம் (வயது.60) ராஜாமணி (வயது.45) என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. சாலையில் ஏற்பட்ட இந்த விபத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

செய்தியாளர், செங்கம் சரவணகுமார்

புனித ரமலான் வாழ்த்துக்கள்..