Home செய்திகள் தீயணைப்புத் துறை சாா்பில் கொரோனா விழிப்புணர்வு ஓவியப்போட்டி

தீயணைப்புத் துறை சாா்பில் கொரோனா விழிப்புணர்வு ஓவியப்போட்டி

by mohan

 தமிழ்நாடு தீயணைப்பு மீட்பு பணிகள் துறையின் இயக்குனர் சைலேந்திரபாபு  உத்தரவின்படி,துணை இயக்குனர் தென் மண்டலம் மதுரை சரவணக்குமார் தலைமையில், மாவட்ட அலுவலர் மதுரை கல்யாணகுமார் முன்னிலையில், கொரோனா விழிப்புணர்வு ஓவியப்போட்டிகள் நடைபெற்றது இதில் ஆர்வத்துடன் பள்ளி மாணவ மாணவிகள் பலர் கலந்து கொண்டு அவர்களது திறமைகளை வெளிக்கொண்டு வந்தனர்.

மதுரை மாவட்டத்திலுள்ள தல்லாகுளம் அனுப்பானடி திருமங்கலம் மதுரை டவுன் உள்ளிட்ட மதுரை மாவட்டத்தில் உள்ள 14 தீயணைப்பு மீட்புப் பணி நிலையங்களிலபிரிவு-(A- பிரிவு 10 வயதிற்கு உட்பட்டவர்கள்-99) (பிரிவு -B -15 வயதுக்கு உட்பட்டவர்கள்-83)மொத்தம் 182 மாணவ மாணவியர்கள் ஓவிய போட்டியில் கலந்து கொண்டார்கள்.ஓவியப் போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றிதழ்களும், பரிசுகளும், துணை இயக்குனர் தென் மண்டலம் மதுரை- அவர்களால் வழங்கப்பட்டது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!