Home செய்திகள் உபி மாநிலம் கான்பூரை சேர்ந்த டாக்டர் ஆர்த்தி லால் சந்தை  கொலை வழக்கில் கைது செய்ய வேண்டும் என; இந்திய தேசிய லீக் கட்சி சார்பாக மத்திய அரசுக்கும், உபி மாநில அரசுக்கும்  கோரிக்கை!

உபி மாநிலம் கான்பூரை சேர்ந்த டாக்டர் ஆர்த்தி லால் சந்தை  கொலை வழக்கில் கைது செய்ய வேண்டும் என; இந்திய தேசிய லீக் கட்சி சார்பாக மத்திய அரசுக்கும், உபி மாநில அரசுக்கும்  கோரிக்கை!

by Askar

உபி மாநிலம் கான்பூரை சேர்ந்த டாக்டர் ஆர்த்தி லால் சந்தை  கொலை வழக்கில் கைது செய்ய வேண்டும் என; இந்திய தேசிய லீக் கட்சி சார்பாக மத்திய அரசுக்கும், உபி மாநில அரசுக்கும்  கோரிக்கை!

உபி மாநிலம் கான்பூர் மருத்துவ கல்லூரியில் டாக்டராக பணியாற்றி வரும் டாக்டர் ஆர்த்தி லால் சந்தை  தப்லீக் ஜமாஅத்தினரை கொரோனா மருத்துவம் பார்க்க கூடாது அவர்களை கொலை செய்ய வேண்டும் என ஊடகங்களுக்கு பேட்டி அளித்த வீடியோ சமூக வலை தளங்களில் உலா வருகிறது.

தப்லீக் ஜமாஅத்தினர் எச்சில் துப்புகிறார்கள் கொரொனா பரப்ப மருத்துவமனை வளாகத்தில் முயற்சி செய்கிறார்கள் என  பொய் குற்றச்சாட்டுகள் ஊடகங்கள் மூலமாக பரப்பியதும் இதே டாக்டர் ஆர்த்தி லால் சந் தான் என விடியோவில் தெளிவாக உள்ளது.

(காவல்துறை அதிகாரிகள் மற்றும் மருத்துவமனை காப்பாளர்கள் எல்லாம் ஊடகங்கள் மூலமாக எச்சில் துப்பவில்லை , அநாகரிகமாக தப்லீக் ஜமாஅத்தினர் நடக்க வில்லை என மறுப்பு தெரிவித்தனர்)

தப்லீக் ஜமாஅத்தினரை சாகடிக்க வேண்டும் காட்டில் அடைத்து வைத்து கொல்ல வேண்டும்,

இந்திய சுகாதாரத் துறை அமைச்சரை சந்தித்து இவர்களை சிறையில் அடைத்து சாகடிக்க உத்தரவு வாங்குவேன் என ஆர்த்தி லால் சந் ஆவேசமாக ஊடகங்களில் பேட்டி கொடுக்கிறார்.

டாக்டர் ஆர்த்தி லால் சந் போன்ற பாசிச எண்ணம் கொண்ட ஊடகவியளாலர் ஒருவர் தப்லீக் ஜமாஅத்தினரை நீங்க சொல்வது  போல கொலை செய்வதை விட விஷ ஊசி போட்டு கொலை செய்யலாம் என்று சொல்லும் போது அதை டாக்டர் ஆர்த்தி லால் மறுக்காமல் ஆ ..ஊ … என மழுப்புகிறார்.

இவர் சாதாரணமான டாக்டர் இல்லை இண்டியன் மெடிக்கல் அசோசியன் IMA முன்னாள் தலைவர் இவரின் கணவர் கூட டாக்டர் லால் சந் IMA யின் முன்னாள் தலைவர்.

டாக்டர் ஆர்த்தி லால் சந் மீது கொலை வழக்கு பதிவு செய்து கைது செய்தால் மட்டுமே இனிவரும் காலங்களில் கொடிய  நோயை மதத்துடன் ஒப்பிட்டு இது போன்ற பேட்டி கொடுக்க மாட்டார்கள்.

டாக்டர் ஆர்த்தி லால் சந்தின்  தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சி காரணமாக இந்திய முழுவதும் முஸ்லீம் சமுதாயம் சொல்லாலென துயரத்திற்கு ஆளாகியது மட்டுமில்லை இன்று வரை அந்த கொடுமை  தொடர்கிறது  என்பது குறிப்பிடத்தக்கது.

டாக்டர் ஆர்த்தி லால் சந் போல முஸ்லீம் டாக்டர் யாராவது இப்படி பேசி இருந்தால் மத்திய மாநில அரசுகள் இப்படி தான் அமைதியாக இருக்குமா?

தற்போது டாக்டர் ஆர்த்தி லால் சந் மறுத்து பேசுவதும் , மன்னிப்புக் கேட்பதும் சமுதாயத்திற்கு எந்த பலனும் இல்லை ஆகையால் மத்திய பாஜக அரசும் , உபி மாநில பாஜக அரசும் டாக்டர் ஆர்த்தி லால் சந்தை கொலை வழக்கில் கைது செய்ய வேண்டும் என இந்திய தேசிய லீக் கட்சி சார்பாக வலியுறுத்துகிறோம்.

அன்புடன் தடா ஜெ அப்துல் ரஹிம் இந்திய தேசிய லீக் கட்சி மாநில தலைவர்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!