7
அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பாக பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து ஆர்ப்பாட்டம்!
திண்டுக்கல் மாவட்டத்தில் அகில இந்திய விவசாயிகள் சங்கம் சார்பில் 10-இடங்களில் யூனியன் அலுவலகங்கள் முன்பு 4.6.2020-வியாழன் காலை கொரானா நிவாரணம் ரூபாய் 7500 ஒவ்வொரு குடும்பத்திற்கும் வழங்கிட கோரியும், 100-நாள் வேலையை 200-நாட்களாக வழங்கிட கோரியும், சம்பளம் ரூபாய் 600 வழங்கிட கோரியும், விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் தொடர்ந்து வழங்கிட கோரியும் மனுக்கொடுத்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் 542 பேர் கலந்து கொண்ட ஆர்ப்பாட்டத்தில் 1446 மனுக்கள் கொடுக்கப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட அனைவரும் முகக்கவசம் அனிந்து சமூக இடைவெளியை பின்பற்றினர்.
You must be logged in to post a comment.