வைத்தீஸ்வரன்கோவில் பேரூராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கு சீருடை வழங்கும் நிகழ்ச்சி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் பங்கேற்பு

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த வைத்தீஸ்வரன் கோயில் பேரூராட்சியில் கொரோனா தடுப்பு பணியில் அர்ப்பணிப்பு உணர்வுடன் ஈடுபட்டு வரும் 40 ற்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்களுக்கு பேரூராட்சி நிர்வாகம் சார்பில் சீருடை, முகக்கவசம், கையுறை வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் சீர்காழி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் பி.வி பாரதி கலந்து கொண்டு தூய்மை பணியாளர்களுக்கு சீருடை, முகக்கவசம், கையுறை ஆகியவற்றை வழங்கினார். இதில் பேரூராட்சி செயல் அலுவலர் குகன் மற்றும் அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இரா.யோகுதாஸ், மயிலாடுதுறை  செய்தியாளர்.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..