இராமநாதபுரம் மாவட்டத்தில் கலைஞர் கருணாநிதியின் 97 வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு திமுக., சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இதனை முன்னிட்டு மண்டபம் ஓன்றியம் ஒன்றிய திமுக., சார்பில் வாலந்தரவை மனவளர்ச்சி குன்றியோர் பள்ளியில் ஓன்றிய பொறுப்பாளர் ஏ.சி.ஜீவானந்தம் தலைமையில் காலை சிற்றுண்டி வழங்கப்பட்டது.
ரெட்டையூரணி ஊராட்சி கிளை சார்பில் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.சாயல்குடி ஒன்றியம் நரிப்பையூர் கடலாடி ஒன்றியம் ஆப்பனூர், ஏனாதி, கிடாத்திருக்கை, கொண்டுலாவி, எஸ்.பி.கோட்டை, சித்திரங்குடி கிராமங்களில் மாவட்ட திமுக பொறுப்பாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம், முன்னாள் அமைச்சர் வ.சத்தியமூர்த்தி, நாடாளுமன்ற உறுப்பினர் கா.நவாஸ்கனி ஆகியோர் நலத்திட்ட உதவி வழங்கினர். சாயல்குடி ஒன்றிய செயலர் ஜெயபாலன், மாநில வர்த்தக அணி துணை செயலர் சாயல்குடி ராமர் உள்பட பலர் பங்கேற்றனர். மாவட்ட கவுன்சிலர் ஆ.ரவிச்சந்திர ராமவன்னி, ராமநாதபுரம் நகராட்சி முன்னாள் கவுன்சிலர் டி.ஆர்.எஸ் அய்யனார் ஆகியோர் நலத்திட்ட உதவி வழங்கினர். மண்டபத்தில் நடந்த விழாவில் நகர் செயலர் டி. ராஜா திமுக., கொடி ஏற்றினார். மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் கே. சம்பத் ராஜா, மொழிப்போர் தியாகி வி.எம்.கே. காந்தக்குமார், மாவட்ட மீனவரணி துணை அமைப்பாளர் என்.பூவேந்திரன், ஒன்றிய பிரதிநிதிகள் தில்லை குமார், கா.ராஜ்குமார், மாவட்ட பிரதிநிதி சாதிக்பாட்ஷா, தகவல் தொழில் நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் த.வெள்ளைச்சாமி உள்பட பலர் பங்கேற்றனர்.ராமேஸ்வரம் நகர் திமுக., சார்பில் கலைஞர் உருவப் படத்திற்கு நகர் திமுக.,செயலர் கே.இ.நாசர்கான் தலைமையில், மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.ராமேஸ்வரம் என்.எஸ்.கே.வீதி மனோலயாவில் உள்ளோருக்கு மதிய உணவு வழங்கப்பட்டது. தங்கச்சிமடம், பாம்பன் பகுதிகளில்ஆதரவற்ற பெண்கள், மாற்றுத்திறனாளிகள், தூய்மை காவலர்கள் என50 பேருக்கு டி.எல்.ஜிம்மி காட்டர் உணவு பொருட்கள் தொகுப்பு வழங்கினார். ராமநாதபுரம் நகரில் நடந்த விழாவில் மாவட்ட பொறுப்பாளர் காதர் பாட்சா முத்துராமலிங்கம், தலைமை செயற்குழு உறுப்பினர் எஸ்.அஹமது தம்பி, நகர் செயலர் கார்மேகம் உள்பட பலர் கலந்து கொண்டனர். பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.
You must be logged in to post a comment.