நாளுக்கு நாள் கொரோனோ பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் கொரோனோ பாதிப்பு முழுமையாக நீங்கிய பின்னர் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்த வேண்டும்:-தங்கம் தென்னரசு..
ஒன்பதரை லட்சம் மாணவர்கள் தேர்வு எழுத உள்ள நிலையில் தேர்வு தற்போதைய நிலையில் தேர்வுக்கு பள்ளிகளை தயார் செய்வதும் மாணவர்கள் தேர்வு எழுத வருவதிலும் மிகச்சிரமம், உடனடியாக 10ம் வகுப்பு தேர்வு நடத்துவது என்பது மாணவர்களுக்கு மிகுந்த அச்சத்தை தரக்கூடியதாக இருக்கும்.
அரசு தீவிரமாக சிந்தித்து கொரோனோ பாதிப்பு முழுமையாக நீங்கிய பின்னர் 10ம் வகுப்பு தேர்வை நடத்துவதே மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் சரியானதாக இருக்கும்.
ஒரு மண்டலத்தில் இருந்து மற்றொரு மண்டலத்திற்கு செல்வதற்கு இ பாஸ் தேவை என்ற நடைமுறை கொரோனோ பொதுமுடக்கம் காலத்த்தில் இடம்பெயர்ந்த மாணவர்களின் கல்வியை பாதிக்கும் என்று கூறினார்.
செய்தியாளர், வி. காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.