அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மீது காவல்துறையில் புகார்..

144 தடை உத்தரவை மீறி, போதிய சமூக இடைவெளியை பின்பற்றாமல் கொரோனாவை பரப்பும் வகையில் இன்று (31.05.20) ஞாயிறு பகல் 11 மணியளவில் திருமங்கலம் ஹரிஸ் ஓட்டலில் உள்ள மீட்டிங் ஹாலில், மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டத்தை தலைமை ஏற்று நடத்தியுள்ள அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், கலந்து கொண்ட அதிமுக நிர்வாகிகள் மாணிக்கம் எம்எல்ஏ., நீதிபதி எம்எல்ஏ., ராஜ்சத்யன், அய்யப்பன், விஜயன் உள்ளிட்ட நிர்வாகிகள் மீதும், முறைகேடாக அனுமதி வழங்கியுள்ள ஹரீஸ் ஓட்டல் நிர்வாகத்தின் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டுமென..அம்மா மக்கள் முன்னேற்றக் கழக திருமங்கலம் நகர செயலாளர் வைரவன் காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

புனித ரமலான் வாழ்த்துக்கள்..