மதுரை கூடல் நகரில் ஏழை எளிய மக்களுக்கு கொரோனா நிவாரண பொருட்களை செல்லூர் ராஜூ வழங்கினார்…

மதுரை 1வார்டு கூடல்நகரில் அப்பகுதி பொதுமக்களுக்கு அதிமுக இளைஞர் இளம்பெண்கள் பாசறை மாவட்ட துணைச் செயலாளர் சிலம்பரசன் மற்றும் வட்டச் செயலாளர் செந்தில்குமார் ஆகியோர் ஏற்பாட்டில், அரிசி மற்றும் நிவாரண பொருட்களை மதுரை மாநகர் மாவட்டச் செயலாளரும் தமிழக கூட்டுறவு துறை அமைச்சருமான செல்லூர் கே.ராஜூ வழங்கினார். இந்நிகழ்வில் மத்திய கூட்டுறவு வங்கி சேர்மன் எம்.எஸ் பாண்டியன், அதிமுக மாவட்ட பொருளாளர் வில்லாபுரம் ராஜா மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

கீழை நியூஸுக்காக மதுரை கனகராஜ்

புனித ரமலான் வாழ்த்துக்கள்..