ஜூன் 1 முதல் தமிழகத்தில் ரயில் சேவை தொடங்கப்படுகிறது. இது சம்பந்தமாக ரயில்வே வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பு:
கோவை -மயிலாடுதுறை-கோவை இடையே இயக்கப்படும் ஜன்சதாப்தி சிறப்பு ரயில் (செவ்வாய் கிழமை தவிர) மற்ற நாட்களில் இயக்கப்படும்.
கோவையில் காலை 7:10 மணிக்கு புறப்படும் இந்த ரயில் மதியம் 1:40 மணிக்கு மயிலாடுதுறை சென்றடையும்.
மறுமார்க்கத்தில் மதியம் 2:50 மணிக்கு புறப்பட்டு இரவு 9:15 மணிக்கு கோவை சென்றடையும்
மதுரை-விழுப்புரம்-மதுரை அதிவிரைவு சிறப்பு ரயில், மதுரையில் இருந்து காலை 7 மணிக்கு புறப்பட்டு 12:05 மணிக்கு விழுப்புரம் வரும்.
பின்னர், மாலை 4 மணிக்கு புறப்பட்டு மதுரைக்கு இரவு 9:20 மணிக்கு சென்றடையும்
திருச்சி-நாகர்கோவில்-திருச்சி, கோவை-காட்பாடி-கோவை இடையே அதி விரைவு சிறப்பு ரயில்கள் இயங்க உள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
இந்த ரயில்களுக்கான முன்பதிவு இன்று மாலை 4 மணிக்கு தொடங்குகிறது.
ரயில்கள் புறப்படும், சேரும் மற்றும் நின்று செல்லும் ரயில் நிலையங்களில் குறைந்த பட்சம் 2 டிக்கெட் கவுன்டர்கள் செயல்படும் என தெற்கு ரயில்வே செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
You must be logged in to post a comment.