Home செய்திகள் மேட்டுபாளையத்தில் சிஐடியு தொழிற்சங்கம் 50 வது ஆண்டு அமைப்புதின கொண்டாட்டம்!

மேட்டுபாளையத்தில் சிஐடியு தொழிற்சங்கம் 50 வது ஆண்டு அமைப்புதின கொண்டாட்டம்!

by Askar

மேட்டுபாளையத்தில் சிஐடியு தொழிற்சங்கம் 50 வது ஆண்டு அமைப்புதின கொண்டாட்டம்!

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் சிஐடியு பொது தொழிலாளர் சங்கம் சார்பில், சிஐடியு தொழிற்சங்கம் 50ஆவது ஆண்டு நிறைவு தின கொண்டாட்டம் நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற்றது.

இன்று  சிஐடியு தொழிற்சங்க ஐம்பதாவது ஆண்டு நிறைவையொட்டி மேட்டுப்பாளையம் தாலுகா பொது தொழிலாளர் சங்கம் சார்பில் உழைப்பாளர் சாலையோர சிறு வியாபாரிகள் மார்க்கெட் மற்றும் பல்வேறு இடங்களில் சிஐடியு தொழிற்சங்க கொடியேற்று விழா நடந்தது.

இதில் சங்க பொதுச் செயலாளர் S,பாஷா தலைமை வகித்து சிஐடியு தொழிற்சங்கத்தின் சிறப்புகள் குறித்து சிறப்புரை ஆற்றினார். இந்நிகழ்வில் தலைவர் ராஜன் பொருளாளர் சபரிகிரிசன் முன்னிலை வகித்தார். தொழிற்சங்க மூத்த நிர்வாகி பாப்பாத்தி அம்மா கொடியேற்றினார். சாலையோர வியாபாரிகளுக்கு தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு சங்க பொறுப்பாளர் ராஜா சாகுல் அமீது இனிப்பு வழங்கினார். மேலும் கொரோனா தொற்றிலிருந்து பாதுகாத்துக்கொள்ள கபசுர குடிநீர், மற்றும், ஹோமியோபதி மாத்திரை ஆர்சனிக் 30 வழங்கப்பட்டது, மேலும் நலிந்த நிலையில் உள்ள, சாலையோர சிறு வியாபாரிகள் குடும்பத்திற்கு, நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது, இந்த நிகழ்ச்சியில் சிஐடியு பொதுத் தொழிலாளர் சங்க நிர்வாகிகள், பதுருதீன், சம்சுதீன், ஆனந்தன், காளீஸ்வரன், நிஜாமுதீன் ,சென்னி அம்மா, ஆனந்தி, லட்சுமி, ஜெயந்தி, பாத்திமா, வசந்தா உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் சமூக இடைவெளியுடன் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!