மைக்ரோ ஃபைனான்ஸ் நிறுவனங்களால் மகளிர் குழுக்கள் கடன் தொல்லை தாங்காமல் வட்டாட்சியரிடம் மனு கொடுத்து முறையீடு செய்தனர்.
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் நகர் மற்றும் கிராம பகுதிகளில் 30க்கும் மேற்பட்ட மைக்ரோ பைனான்ஸ் நிதி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன இந்த நிதி நிறுவனங்களில் ஏராளமான மகளிர் சுய உதவிக்குழு மற்றும் இல்லத்தரசிகள் என 10 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் கடன் வாங்கி உள்ளனர் தற்போது 144 தடை உத்தரவு உள்ள நிலையில் மத்திய மாநில அரசுகள் கடன் செலுத்த கால அவகாசம் விதித்துள்ளது இருப்பினும் மைக்ரோ பைனான்ஸ் நிறுவனங்கள் தொடர்ந்து கடன்களை செலுத்த வேண்டும் அதுவும் வட்டியுடன் செலுத்த வேண்டும் காலதாமதம் ஆக்க கூடாது என மகளிர் குழுக்களையும் பெண்களையும் வலியுறுத்தி வருவதால் அவர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் புலம்பி வருகின்றனர் இந்த சூழ்நிலையில் மைக்ரோ பைனான்ஸ் நிறுவனங்கள் மிகவும் கடுமையாக நடந்து கொள்வதாக கூறி வட்டாட்சியரிடம் 50க்கும் மேற்பட்ட பெண்கள் மனு கொடுத்து தங்களுக்கு கால அவகாசம் வழங்க வேண்டும் எனவும் மத்திய மாநில அரசுகளின் உத்தரவை பின்பற்ற வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.