கஷ்டப்படும் குடும்பத்திற்கு உதவிய வடகாடு காவல் ஆய்வாளர்!
கொரோனா வைரஸ் நோய் தொற்று பரவுதலை தடுப்பதற்காக முன்னெச்சரிக்கையாக 144 ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் 26.05.2020 அன்று புதுக்கோட்டை மாவட்டம், புள்ளான் விடுதியில் கஷ்டப்படும் குடும்பத்திற்கு மாரியம்மன் நற்பணி மன்றம் குழுவின் உதவியுடன் வடகாடு காவல் ஆய்வாளர் பரத்ஸ்ரீனிவாசன் காவல்துறை சார்பாக அரிசி, காய்கறிகள் வழங்கினார். மேலும், கைகளை கழுவும் முறைகள் பற்றியும், அத்தியாவசிய பொருட்கள் வாங்க பொது இடங்களுக்கு வரும்போது முககவசம் அணியுமாறும், சமூக இடைவெளி கடைப்பிடித்தல் பற்றியும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
You must be logged in to post a comment.