10
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் இணை ஆணையராக இருந்த நடராஜன் 8 வருடத்திற்கு பிறகு திடீரென பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
இந்து சமய அறநிலைய துறையில் ஒரு இடத்தில், 3 வருடம் மட்டுமே பதவியில் இருக்க முடியும் என்பதை மாற்றி பல வருடங்களாக நடராஜன் மீனாட்சி அம்மன் கோவிலில் இணை ஆணையராக பணியில் இருந்தார்.பல வருடங்களுக்கு பிறகு திடீரென பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் சேலம் மண்டல அறநிலைய துறை இணை ஆணையராக நடராஜன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
திருவேற்காட்டில் பணியாற்றும் செல்லத்துரை,மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
கீழை நியூஸுக்காக மதுரை கனகராஜ்
You must be logged in to post a comment.