சீனியப்பா தர்கா குடியிருப்பு மக்களுக்கு நிவாரண உதவி..

நேஷனல் பிரஸ் அண்ட் மீடியா பெடரேஷன் மாநில தலைவரும், சித்தார்கோட்டை ஜமாத் முன்னாள் தலைவருமான அல்தாப் உசேன் ஏற்பாட்டில் கொரானா பரவல் தடுப்பு நடவடிக்கையாக தேசிய ஊரடங்கு உத்தரவினால் மிகவும் சிரமப்படும் மக்களுக்கு தேவையான உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.

ஏர்வாடி, திருப்புல்லாணி அருகே எம்ஜிஆர் நகர், பட்டணம்காத்தான், ராமநாதபுரம் வனசங்கரி அம்மன் கோயில் தெரு உள்பட பல்வேறு பகுதிகளில் நிவாரண உதவிகள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. ஏழாவது முறையாக நேஷனல் பிரஸ் அண்ட் மீடியா பெடரேஷன் மற்றும் புலனாய்வு எக்ஸ்பிரஸ் இதழ் சார்பில் உச்சிப்புளி அருகே சீனியப்பா தர்ஹா குடியிருப்பு பகுதி மக்களுக்கு அரிசி, மளிகை பொருட்கள், இதர செலவுக்கு ரொக்கம் போன்ற உதவிகளை நேஷனல் பிரஸ் அண்ட் மீடியா பெடரேஷன் மாநில தலைவர் அல்தாப் உசேன் வழங்கினார். பொறுப்பாசிரியர் சிவசங்கரன், போட்டோகிராபர் பாக்கியராஜ் உடன் இருந்தனர். பேரிடர் காலத்தில் உதவிக்கரம் நீட்டிய மாநில தலைவர் அல்தாப் உசைனுக்கு மக்கள் நன்றி தெரிவித்தனர்.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..