Home செய்திகள் மெல்ல மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பும் ஆத்தூர் தாலுகா பகுதிகள்!

மெல்ல மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பும் ஆத்தூர் தாலுகா பகுதிகள்!

by Askar

மெல்ல மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பும் ஆத்தூர் தாலுகா பகுதிகள்!

கடந்த சுமார் 56 நாட்களாக அரசு 144 தடையுத்தரவு அறிவிக்கப்பட்டு தற்போது வரை அமுலில் இருந்து வரும் சூழலில் அரசு 34 தொழில் சார்ந்த நிறுவனங்கள் இயங்க அனுமதியளித்ததோடு மேலும், நேற்று வரை மக்கள் பயன்பாட்டுக்கான சில அறிவுப்புகளையும் வெளியிட்டு காலை 07 மணிமுதல் மாலை 07 மணிவரை தொழில் ஸ்தாபனங்கள் இயங்கும் நேரமும் அறிவிக்கப்பட்டதின் பேரில் மக்கள் தங்கள் அடிப்படை மற்றும் ஆத்தியாவசியப் பொருட்கள் வாங்கும் பொருட்டு வீட்டை விட்டு வெளியில் வந்து செல்கின்றனர். மேலும், அந்த அந்த மாவட்டத்திற்குள் சென்று வர இ- பாஸ் முறை விளக்கிக் கொள்ளப்பட்டுள்ளதால் நான்கு சக்கர வாகனங்களை அதிகமாக சாலைகளில் காணமுடிகிறது. சரக்கு வாகனங்களும் அதிகமாக சாலையில் பயணிப்பதால் ஆத்தூர் தாலுகா பகுதிகளில் மெல்ல மெல்ல இயல்பு நிலை திரும்பி வருகிறது.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!