வெறிச்சோடிய மதுக்கடைகள்! கையில் காசு இல்லாததே காரணம்! மதுப்பிரியர்கள் வேதனை!

வெறிச்சோடிய மதுக்கடைகள்! கையில் காசு இல்லாததே காரணம்! மதுப்பிரியர்கள் வேதனை!

அரசு மேல்முறையீட்டின் பேரில் உச்ச நீதிமன்றம் உத்தரவின் அடிப்படையில் மனபானகடைகள் இயங்கி வரும் நிலையில் கடந்த இரண்டு தினங்களாக குடிமகன்களின் கூட்டம் மதுபானகடைகளின் முன்பு வரிசை கட்டி நின்று வாங்கிச்செல்லும் நிலையில் ஆத்தூர் தாலுகா கோழிபண்ணை பிரிவு அருகே இயங்கி வரும் மதுபானகடையில் மதுப்பிரியர்களின் கூட்டம் சற்று ஏனோ குறைவாகவே உள்ளது. இதுபற்றி மதுப்பிரியர் ஒருவர் கிராமத்து பானியில் கூறுகையில் தடையுத்தரவு அமுலில் உள்ளதால் வேலைவெட்டி இல்லாமல் சாப்பாட்டுகே வழியில்லாமல் தவிக்கும் சூழல் உள்ளது. ஆகையால் மதுவாங்கி குடிக்க கையில் பணம் இல்லாததே காரணம் என மிகவருத்தத்துடன் கூறினார். ஆனால் மதுவிற்பனையாளர் கூறுகையில் எப்போதும் போல்தான் மதுவிற்பனை உள்ளது என கூறினார். இதில் உண்மை என்னவோ! ஆனால், கடைவெறிச்சோடிதான் காணப்படுகிறது.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..