தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே பஞ்ச பள்ளி அரசு சிறுவர்கள் மற்றும் குழந்தைகள் இல்லத்தில் சமூக பாதுகாப்பு துறையின் மூலம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையில் யோகா மற்றும் இயற்கை மருத்துவ பிரிவின் கீழ் கொரோனோ விழிப்புணர்வு முகாம் நடைப்பெற்றது.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க தினமும் சூரிய குளியல், மூச்சு பயிற்சி மற்றும் யோகாசனம், பிரானாயாமம் ஆகியவை குறித்து மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்து.
மேலும் மிதமான சூடான பாலில் சிறிதளவு மஞ்சள் மிளகு பனங்கற்கண்டு சேர்த்து பருகவும் தினசரி உணவில் காய்கறி பழங்கள் போன்றவற்றை சேர்த்துக் உன்ன வேண்டும் என்பன குறித்து விளக்கப்பட்டது.
இம் முகாமில் யோகா மற்றும் இயற்கை மருத்துவர் பிரித்விராஜ், சிறுவர் இல்ல கண்காணிப்பாளர் சுந்தரமூர்த்தி, வட்டார மருத்துவ அலுவலர் சரஸ்குமார் மற்றும் மருத்துவர்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் இயற்கை மூலிகை பானம் மற்றும் விழிப்புனர்வு குறித்த துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன.
You must be logged in to post a comment.