மதுரை மாநகராட்சி பகுதிகளில் தடையை மீறி செயல்பட்ட 4 இறைச்சி கடைகள் சீல் வைக்கப்பட்டு 250 கிலோ இறைச்சிகள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்தியாவில் கொரோனா வைரஸ் காய்ச்சலினை முற்றிலுமான தடுப்பதற்கு மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
அதன்படி மதுரை மாநகராட்சி பகுதிகளில் கொரோனா தடு பணிகள் தீவிரமாக மேற் ள்ளப் பட்டு வருகிறது . மேலும் கொரோனா நடவடிக்கையாக மக்கள் கூடுவதை தவிர்க்கும் வகையில் 17.05.2020 ( ஞாயிற்றுக்கிழமை ) அன்று இறைச்சி கடைகள் இயங்காது என மதுரை மாவட்ட ஆட்சித் தலைவரால் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி ஆணையாளர் ச.விசாகன் , இ.ஆ.ப. உத்தரவின்படி இன்று காலை 5 மணி முதல் கண்காணிக்கப்பட்டதில் மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட வார்டு எண்.13, கரிமேடு, வார்டு எண் .14 மஞ்சள் மேடு காலனி ஆகிய பகுதிகளில் தடையை மீறி மீன் மற்றும் இறைச்சி கடைகளை திறந்து வைத்த 4 கடைகள் பூட்டி சீல் வைக்கப்பட்டு, அக்கடைகளில் இருந்து இறைச்சி மற்றும் மீன் என மொத்தம் 250 கிலோ பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டது
இந்த ஆய்வின்போது சுகாதார அலுவலர் விஜயகுமார், சுகாதார ஆய்வாளர் ராமனாதன், காவல்துறையினர் மற்றும் சுகாதார பணியாளர்கள் ஈடுபட்டனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.