மதுரை விக்டோரியா எட்வர்டு மன்றத்தில் சமூக ஆர்வலர்கள் சார்பில் நாதஸ்வர _ தவில் இசை பிரார்த்தனை நடை பெற்றது. நாதஸ்வர இசை கலைஞர்களின் தலைவர் செல்வம் தலைமையில் இசை பிரார்த்தனை செய்தனர்.
50க்கும் மேற்பட்ட நாதஸ்வர – தவில் இசை கலைஞர்கள் பங்கேற்ற இந்த பிரார்த்தனையில் நாதஸ்வர – தவில் இசை கலைஞர்களின் கீரவாணி ராகத்தில் தேவி நீயே துணை என்ற பாடலை கலைஞர்கள் வாசித்தனர்.
எட்வர்டு மன்றத்தில் இருந்த அனைவரும் அந்த இசையை ரசித்தனர். அதோடு மதுரை மேடையில் சலுன்கடை நடத்தி வரும் மோகன் மகள் நித்யா. – 9ம் வகுப்பு படிக்கும் மாணவி சேமித்து வைத்திருந்து 2 லட்ச ரூபாய் பணத்தை கொரானாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவி வழங்கியதை பாராட்டி பாராட்டு கேடயம் வழங்கினர்.
நிகழ்வின் முடிவில் தவில் – நாதஸ்வர கலைஞர்களுக்கு இலவச அரிசி, காய்கறி பலசரக்கு உள்ளிட்ட நிவாரண பொருள்கள் வழங்கப்பட்டது.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.