Home செய்திகள்கீழக்கரை செய்திகள் கொரோனா பாதிப்பிலிருந்து தமிழக மக்களை காக்க மதுரையில் நாதஸ்வர, தவில் இசை கலை பிரார்த்தனை..

கொரோனா பாதிப்பிலிருந்து தமிழக மக்களை காக்க மதுரையில் நாதஸ்வர, தவில் இசை கலை பிரார்த்தனை..

by ஆசிரியர்

மதுரை விக்டோரியா எட்வர்டு மன்றத்தில் சமூக ஆர்வலர்கள் சார்பில் நாதஸ்வர _ தவில் இசை பிரார்த்தனை நடை பெற்றது. நாதஸ்வர இசை கலைஞர்களின் தலைவர் செல்வம் தலைமையில் இசை பிரார்த்தனை செய்தனர்.

50க்கும் மேற்பட்ட நாதஸ்வர – தவில் இசை கலைஞர்கள் பங்கேற்ற இந்த பிரார்த்தனையில் நாதஸ்வர – தவில் இசை கலைஞர்களின் கீரவாணி ராகத்தில் தேவி நீயே துணை என்ற பாடலை கலைஞர்கள் வாசித்தனர்.

எட்வர்டு மன்றத்தில் இருந்த அனைவரும் அந்த இசையை ரசித்தனர். அதோடு மதுரை மேடையில் சலுன்கடை நடத்தி வரும் மோகன் மகள் நித்யா. – 9ம் வகுப்பு படிக்கும் மாணவி சேமித்து வைத்திருந்து 2 லட்ச ரூபாய் பணத்தை கொரானாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவி வழங்கியதை பாராட்டி பாராட்டு கேடயம் வழங்கினர்.

நிகழ்வின் முடிவில் தவில் – நாதஸ்வர கலைஞர்களுக்கு இலவச அரிசி, காய்கறி பலசரக்கு உள்ளிட்ட நிவாரண பொருள்கள் வழங்கப்பட்டது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!