மதுரை காவல்துறை ஆணையர் டேவிட்சன் தேவாசீர்வாதம் அவரது முகநூல் பக்கத்தில் கொரோனா ஊரடங்கும் போது உதவி நல்ல உள்ளங்களுக்கு நன்றி என பதிவிட்டுள்ளார். கரோனா வைரஸின் பரவலை தடுப்பதற்காக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு முடக்கத்தின் வேளையில், மதுரை மாநகரில் வீடற்று, ஆதரவின்றி திரிந்து கொண்டிருந்த 650 நபர்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்து, உணவு அளித்து, சுகாதார ஏற்பாடுகள் மற்றும் மனநல ஆலோசனைகள் வழங்கி, ஒரு சிலருக்கு வேலை வாய்ப்புகள் ஏற்படுத்திக்கொடுத்து, பலரை அவர்களது குடும்பத்தினரோடு இணைத்து மேலும் தங்களது பொன்னான நேரத்தை அவர்களது நலனுக்காக இரவு பகல் என்று பாராமல் உழைத்துக்கொண்டிருக்கும் மதுரை மாநகர ஹீரோக்கள் தான் இவர்கள். வாழ்த்தப்படக்கூடியவர்கள் மட்டும் அல்ல வணங்கப்படக்கூடியவர்கள்! மதுரை மாவட்ட நிர்வாகம், மதுரை மாநகராட்சி மற்றும் மதுரை மாநகர காவல்துறையோடு இணைந்து பணியாற்றும் சிறந்த உள்ளங்கள். அவர்களுக்கும் அவர்களது ஷர்மிளா, லில்லி கிரேஸ், பாரதி, சேது, குளோரி, சிவா குழுவினருக்கும் மிக்க நன்றி. தெரிவித்து அவரது முகநூல் பக்கத்தில் பதிவு செய்து கொண்டார்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.