இராஜபாளையம் அருகே ராமலிங்கபுரம் பகுதியில் விவசாய கிணற்றில் நீரில் முழ்கி இருவர் உயிரிழப்பு…

இராஜபாளையம் அருகே ராமலிங்கபுரம் பகுதியில் விவசாய கிணற்றில் நீரில் முழ்கி இருவர் உயிரிழப்பு. நீரில் மூழ்கி இறந்தவர்களை உடலை பலமுறை மீட்டவர் இன்றும் ஒருவரைக் காப்பாற்றும் போது துரதிஸ்டவசமாக நீரில் மூழ்கி உயிரிழப்பு அவரின் உடலை வாங்க மறுத்து போலீசாரிடம் உறவினர்கள் வாக்குவாத்தில் ஈடுபட்டனர்.

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே இராமலிங்காபுரம் பகுதியை சேர்ந்த முருகன் என்பவர் விவசாய கிணற்றில் குளிக்கும்போது தவறி விழுந்து நீரில் மூழ்கியுள்ளார். இதனை அறிந்த உறவினர்கள் அவரை காப்பாற்றுவதற்காக அப்பகுதியை சேர்ந்த முத்துக்குளிக்கும் நபரான மஸ்தான் பாண்டியன் என்பவரை நாடியுள்ளனர்.

மஸ்தான் பாண்டியன் என்பவர் ஏற்கனவே ராஜபாளையம் பகுதிகளில் கிணற்றிலோ மனது கல்குவாரி நீரில் மூழ்கி உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்பதற்கு தீயணைப்பு துறையினர் பலமுறை மஸ்தான் உதவியை நாடியுள்ளனர் அவரும் பல உடல்களை மீட்டு கொடுத்துள்ளார்

இந்த நிலையில் நீரில் மூழ்கிய முருகனை காப்பாற்ற கிணற்றில் குதித்த முருகன் உடலை மேலே எடுத்து வந்துள்ளார் ஆனால் அவருக்கு உதவி செய்வதற்கு ஆளில்லாத காரணத்தால் அவர் உடலுடன் சேர்ந்து மஸ்தானும் நீரில் மூழ்கி துரதிஷ்டவசமாக இறந்து விட்டார்

இது குறித்து தகவலறிந்த இராஜபாளையம் துணை காவல் கண்காணிப்பாளர் நாகசங்கர் தலைமையிலான காவலர்கள் மற்றும் தீயணைப்பு படை வீரர்கள் கிணற்றில் மூழ்கிய இரண்டு நபர்களையும் மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில் முத்துக்குளிக்கும் நபரான மஸ்தான் பாண்டியன் உடல் மட்டும் இறந்த நிலையில் கைபற்ற பட்டது.

இதனை அறிந்த மஸ்தான் பாண்டியன் உறவினர்கள் கிணற்றில் முழ்கிய நபரை மீட்பு குறித்து எந்த ஒரு தகவலும் அவரது குடும்பத்தினருக்கும், தகவல் கொடுக்காமலும் தீயணைப்பு துறைக்கும் மற்றும் காவல்துறைக்கு தெரிவிக்காமல் இந்த செயலில் ஈடுபட்டதால் காப்பற்ற சென்ற நபரும் உயிரிழந்துள்ளார். இதனால் காப்பாற்ற சென்ற மஸ்தான் பாண்டியன் மரணத்திற்க்கு நீதி வேண்டுமென உடலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லாமல் டி.எஸ்.பி-யிடம் ஒரு மணி நேரத்திற்க்கும் மேலாக வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின் அப்குதியில் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்ட நிலையில் ஊர் மக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு சமரச செய்யப்பட்டதை அடுத்து உடலை ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு சென்றனர்.

மேலும் கிணற்றில் நீரில் முழ்கிய முருகன் என்பவரை தீயணைப்பு துறை மீட்பு குழுவினர் பலமணி நேரம் போராடி தேடி வருகின்றனர். செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

புனித ரமலான் வாழ்த்துக்கள்..