மதுரை மாவட்டம் பழங்காநத்தம் புது அக்ரஹாரம் பகுதியில் கடந்த 25 ஆம் தேதி அன்று ஒருவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து அவர் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று பின் வீடு திரும்பினார்
அப்பகுதி முழுவதும் தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு அதனை சுற்றி உள்ள அனைத்து பகுதிகளும் தடுப்புகளை அடைக்கப்பட்டது. மேலும் அப்பகுதி முழுவதும் தினசரி மாநகராட்சி சார்பாக கிருமிநாசினிகள் தெளித்தும் வெளியாட்கள் உள்ளே வராமலும் உள்ளே உள்ளவர்கள் வெளியே செல்லாமல் மாநகராட்சி அதிகாரிகளும் மற்றும் தன்னார்வலர்களும் பணியாற்றி வந்தனர். அத்துடன் அப்பகுதி மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் மாநகராட்சி சார்பாக வழங்கி வந்தனர்.
கடந்த சில நாட்களுக்கு முன் கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி ஆய்வு செய்த பின் ஒரு வாரம் கழித்து தடுப்புகளை அகற்றலாம் என தெரிவித்து சென்றிருந்தனர். இந்த நிலையில் இன்று மாலை அப்பகுதி மக்களுக்கு நிவாரணங்களை வழங்கிய மாநகராட்சி அதிகாரிகள் பின் தடுப்புகள் அனைத்தையும் அகற்றினர். சுமார் 20 நாட்களுக்கு மேலாக தடுப்புகள் அடைக்கப்பட்டு இருந்த நிலையல் இன்று மாலை தடுப்புகளை அகற்றப்பட்டதால் மகிழ்ச்சியுடன் வரவேற்றனர். மேலும் அங்குள்ள மாநகராட்சி அதிகாரிகளுக்கு நன்றிகளை தெரிவித்தனர். அப்பகுதி மக்கள் கூறுகையில் மாநகராட்சி “அதிகாரிகள் சிறப்பான முறையில் பணியாற்றி தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்தனர். 75&76 வார்டு மாநகராட்சி அதிகாரிகள் விஜயகுமார் மற்றும் சுப்புராஜ் கடந்த 20 நாட்களாக பழங்காநத்தம் அக்ரஹாரம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகள் தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டது முதல் தேவையான அனைத்து வசதிகளையும் மாநகராட்சி சார்பாக செய்யப்பட்டது. அதேபோல் முழு ஒத்துழைப்பு கொடுத்த அனைத்து பொதுமக்களுக்கு மாநகராட்சி அதிகாரிகள் நன்றி தெரிவித்தனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.