Home செய்திகள் பொன்னமராவதி அருகே லயன்ஸ் பதின்மப்பள்ளியில் பொது மக்களுக்கு கொரோனா நிவாரண உதவிகள் வழங்கப்பட்டது..

பொன்னமராவதி அருகே லயன்ஸ் பதின்மப்பள்ளியில் பொது மக்களுக்கு கொரோனா நிவாரண உதவிகள் வழங்கப்பட்டது..

by Askar

பொன்னமராவதி அருகே லயன்ஸ் பதின்மப்பள்ளியில் பொது மக்களுக்கு கொரோனா நிவாரண உதவிகள் வழங்கப்பட்டது..

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி லயன்ஸ் பதின்ம பள்ளியில் லயன்ஸ் சங்கம், லயன்ஸ் கல்வி அறக்கட்டளை, பொன்னமராவதி வி.என்.ஆர் கன்ஸ்ட்ரக்சன்ஸ் ஆகியவை இணைந்து கொரோனாவின் எதிரொலியினால் வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் ஏழை எளிய மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டது. நிவாரணப்பொருட்கள் அரிசி, காய்கறிகள் அடங்கிய தொகுப்பினை பொன்னமராவதி வட்டாட்சியர் திருநாவுக்கரசு, காவல் துணைக் கண்காணிப்பாளர் தமிழ்மாறன் ஆகியோர் துவக்கி வைத்தனர். உடன் தேர்தல் துணை வட்டாட்சியர் பிரகாஷ், பேரூராட்சி முன்னாள் தலைவர் ராஜா அம்பலகாரர், கிராம நிர்வாக அலுவலர் ரமேஷ், லயன்ஸ் சங்க தலைவர் பெரியசாமி, பொருளாளர் வி.என்.ஆர் நாகராஜன் உள்ளிட்ட லயன்ஸ் சங்க நிர்வாகிகள் பழனியப்பன், கருப்பையா, வெள்ளைச்சாமி, சதாசிவம், காமராஜ், பாஸ்கரன், அண்ணாமலை, இளங்கோ, தங்கப்பன், ராமஜெயம், சண்முகம் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு பொது மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினர்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!