5
வாழ்வாதரம் இழந்த அழகு நிலைய தொழிலாளர்கள்: மீண்டும் திறக்க அனுமதி கோரி கலெக்டரிடம் கோரிக்கை மனு..
கன்னியாகுமரி மாவட்ட அழகு நிலையை பெண்கள் குழு சார்பில் கொரோனாவால் ஏற்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட நிலையில், மீண்டும் அழகு நிலையங்களை தருந்த பாதுகாப்பு வழிமுறைகளோடு திறக்க அனுமதி தர வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி அழகு நிலைய பெண்கள் குழு சார்பில் முகக்கவசம் அணிந்து ஆட்சியரிடம் மனு அளித்தனர்..
இதில் பியூட்டிஷன் கலைமதி பத்திரிக்கையாளர் சந்திப்பில், கொரானாவால் பாதிக்கப்பட்ட மற்ற தொழில்களுக்கு அரசு பல சலுகைகள் வழங்கியது போன்று, அழகு நிலையத்தை நம்பியிருந்து கொரானாவால் வாழ்வாதாரம் இழந்து பல தொழிலாளர்கள் மிக ஏழ்மையில் இருப்பதை கருதில் கொண்டு அரசு சலுகை வழங்கி மீண்டும் அழகு நிலையங்கள் திறக்க அனுமதிக்க வேண்டும்’ என கூறினார்.
You must be logged in to post a comment.