மதுரையில் தடையை மீறி கடை திறந்த இரு ஜவுளி கடைகளுக்கு சீல்…

மதுரை மாவட்டம் மேற்கு வட்டாட்சியாளர் கோபி  தலைமையிலான குழுவினர் பைபாஸ் சாலை காளவாசல் உள்ளிட்ட பகுதிகளில் சோதனை மேற்கொண்டு வந்தனர். அப்பொழுது தடை விதிக்கப்பட்டிருந்த கடைகள் திறந்த காரணத்திற்காக இன்று (11/05/2020) பொன்மேனி கிராம நிர்வாக அலுவலர் அமுதா, தலையாரி பால்பாண்டி மற்றும் பழனி தலைமையிலான குழுவினர் அதிரடி சோதனைஇயல் சீல் வைத்தனர்.

இரு ஜவுளி கடைகளுக்கு சீல் வைத்த வட்டாட்சியர் கூறுகையில் தடையை மீறி யாரேனும் கடைகள் திறந்தால் கட்டாயமாக சீல் வைக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

புனித ரமலான் வாழ்த்துக்கள்..