மதுரை அருகே அலங்காநல்லூரில் கணவன் மது குடித்து வந்ததால் அவருடன் ஏற்பட்ட தகராறில் மனைவியும், மகளும் தீக்குளித்து உள்ளனர் .உயிருக்கு ஆபத்தான நிலையில் இவர்கள் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் நாகம்மாள் கோவில் பகுதியை சேர்ந்தவர் சிவகுமார். இவர் கட்டிட தொழிலாளி ஆவார். நீண்ட நாட்களுக்குப் பிறகு இன்று டாஸ்மாக் கடை திறந்த நிலையில் அங்கு சென்று மது குடித்து விட்டு வீட்டிற்கு வந்துள்ளார் . கடந்த 40 நாட்களாக மது குடிக்காமல் இவர் இருந்ததால் மன மகிழ்ச்சியில் இருந்த குடும்பத்தினர் இன்று அதிர்ச்சி அடைந்தனர்.
இதனால் கணவரிடம் மனைவி பரமேஸ்வரி (38) மற்றும் மகள் அர்ச்சனா (18) ஏன் மது குடித்து வந்தீர்கள் என தகராறு செய்தார் இந்த தகராறு முற்றியதில் பரமேஸ்வரி வீட்டில் இருந்த மண்ணெண்ணையை ஊற்றி தற்கொலைக்கு முயன்றார். இதனை பார்த்த அருகிலிருந்த மகள் அர்ச்சனாவும், மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதில் பலத்த காயமடைந்த இருவரும் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் மகள் அர்ச்சனா மதுரையில் உள்ள கல்லூரி ஒன்றில் முதலாமாண்டு படித்து வருகிறார். இது குறித்து அலங்காநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.