விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே உள்ள சேத்தூர் பேருந்து நிலையம் பின்புறம் வசிப்பவர் லட்சுமண பெருமாள் (வயது 60) இவருக்கு நான்கு குழந்தைகள் உள்ளனர். சிறிய அளவில் இடமும் இவருக்கு இருந்துள்ளது. இந்த இடத்தை தனக்கு பிரித்து கொடுக்க வலியுறுத்தி அவருடைய மூன்றாவது மகனான குருவையா (வயது 40) லட்சுமண பெருமாளிடம் பலமுறை வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
இந்த நிலையில் இன்று லட்சுமண பெருமாளை மகன் குருவைய்யா தான் மறைத்து வைத்து இருந்த அரிவாளால் தலை பகுதி மற்றும் நான்கைந்து இடங்களில் வெட்டி கொலை செய்துள்ளார்.
இச்சம்பவம் குறித்த தகவலின் பெயரில் சேத்தூர் காவல் நிலைய ஆய்வாளர் குமார் நேரில் சென்று உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக இராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து குற்றவாளி குருவையாவை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.