9
கொரோனா வைரஸ் பாதிப்பை அடுத்து 144 தடை உத்தரவால் வாழ்வாதாரத்தை இழந்து வறுமையில் வாடிய 270 ஆட்டோ டிரைவர்களுக்கு நிவாரண உதவி வழங்கிய சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர்.
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே உள்ள சத்திரப்பட்டி முறம்பு உள்ளிட்ட பகுதிகளில் சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் இராஜவர்மன் 144 தடை உத்தரவை அடுத்து வாழ்வாதாரம் இல்லாமல் வறுமையில் வாடி வந்த ஆட்டோ ஓட்டுநர்கள் தங்களுக்கு உதவி செய்யுமாறு கோரிக்கை வைத்தனர்.
அந்த கோரிக்கையை அடுத்து 270 ஆட்டோ ஒட்டுநர்களுக்கு சுமார் ஒரு லட்சத்து 35 ஆயிரம் மதிப்புள்ள நிவாரண பொருட்களை வழங்கினார். சமூக விதிகளை பின்பற்ற வைத்து ஒருவருக்கொருவர் இடைவெளியுடன் அமர வைத்து அவர்களுக்கு நேரில் சென்று நிவாரண உதவிகளை வழங்கினார்.செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.