Home செய்திகள்கீழக்கரை செய்திகள் கமுதியில் பூச்சி மருந்து மூலம் பழுத்த 3.5 டன் மாம்பழம் பறிமுதல்..

கமுதியில் பூச்சி மருந்து மூலம் பழுத்த 3.5 டன் மாம்பழம் பறிமுதல்..

by ஆசிரியர்

இராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பூச்சி மருந்து தெளித்து பழுக்க வைத்த மாம்பழங்கள்  அதிகம் விற்பனை செய்யப்படுவதாக, மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் சிவராமபாண்டியனுக்கு தகவல் கிடைத்தது.

இதனடிப்படையில், கமுதி பேரூராட்சி செயல் அலுவலர் இளவரசி தலைமையில், உணவு பாதுகாப்பு அலுவலர்கள் முத்துச்சாமி (கமுதி), வீரமுத்து (போகலுார்) ஆகியோர் கமுதியில் உள்ள பழ கிட்டங்கிகளில் ஆய்வு செய்தனர். இதில் விவசாயத்திற்கு பயன்படுத்தும் பூச்சி கொல்லி மருந்து மூலம் செயற்கை முறையில் பழுக்க வைத்தது தெரிந்தது. கருப்பசாமி, வலம்புரி, அண்ணா துரை ஆகியோர் கிட்டங்கிகளில் இருந்து 3.5 டன் மாம்பழங்கள்,  தடை செய்யபட்ட பிளாஸ்டிக் பை 2 கிலோ பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்த மாம்பழங்களை, பேரூராட்சி பணியாளர்கள் அழித்தனர். பூச்சி மருந்து மூலம் மாம்பழங்களை பழுக்க வைத்த 3 பேருக்கும் தலா ரூ. 2 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!