9
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே கொரோனா அச்சுறுத்தலை பொருட்படுத்தாமல் வெளியில் சுற்றி திரிந்த வாலிபர்களை தோப்புக்கரணம் போட வைத்து காவல்துறையினர் தண்டனை வழங்குகின்றனர்.
நாடு முழுவதும் வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு மே.17 வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் அத்தியாவசிய தேவையின்றி பொதுமக்கள் யாரும் வெளியே வரவேண்டாம் என தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே சொக்கநாதன் புத்தூர் பகுதியில் கொரோனா வைரஸை பொருட்படுத்தாமல் தேவையின்றி வெளியில் சுற்றிய வாலிபர்களை காவல்துறையினர் பிடித்து இனி வெளியில் வர மாட்டோம் என கூறிக்கொண்டு தோப்புக்கரணம் போட வைத்தனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.