14
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா வில்லாபுரம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பைச் சேர்ந்தவர் சம்ஜத்கான். இரு சக்ர வாகனம் சுத்தம் செய்பவர்.இவரது மகன்கள் அசாருதீன், சல்மான்கான் இருவரும் யோகா பயிற்சியில் சர்வதேச விருதுகளைப் பெற்றவர்கள்.இன்னிலையில் உலகம் முழுவதும் கொரான வைரஸ் தாக்குதல் பரவி வரும் சூழ்நிலையை தொடர்ந்து சமூக இடைவெளி குறைந்து வருவதை கண்டு மத்திய மாநில அரசுகள் பல்வேறு எடுத்து வருகின்றன.
மதுரை மாவட்ட ஆட்சியர் வினய் உத்தரவின்பேரில் சமூக இடைவெளிக்காக குடை பிடித்து வெளியே வர வேண்டும் என்று கூறியதை தொடர்ந்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த யோகா மாணவர்கள் குடையுடன் ஒம் கார ஆசனம், வீரபத்ர ஆசனம் , பத்மாசனம், ராஜ கபட ஆசனம் , உள்ளிட்ட பல்வேறு யோகாசனங்கள் செய்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.