Home செய்திகள்கீழக்கரை செய்திகள் சத்தியபாதை மாத இதழ் மற்றும் கீழை நியூஸ் குழுமம் சார்பாக கீழக்கரை டி.எஸ்.பி தலைமையில் மாற்றுதிறனாளிகளுக்கு அத்தியாவசிய பொருள் உதவி..

சத்தியபாதை மாத இதழ் மற்றும் கீழை நியூஸ் குழுமம் சார்பாக கீழக்கரை டி.எஸ்.பி தலைமையில் மாற்றுதிறனாளிகளுக்கு அத்தியாவசிய பொருள் உதவி..

by ஆசிரியர்

கடந்த சில நாட்களுக்கு முன்பாக சன்ரைஸ் ஸ்டூடியோ பாலாஜி மூலமாக இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை மாயாகுளம் பஞ்சாயத்திற்க்குட்பட்ட பகுதிகளில் 60க்கும் மேற்பட்ட மாற்று திறனாளிகளுக்கு உதவுங்களேன், அத்தியாவசிய பொருட்களுக்கான தேவையில் உள்ளனர் என்று முகநூலில் என்று செய்தி வந்திருந்தது.

இந்த தகவலின் அடிப்படையில் சத்தியபாதை மாதஇதழ் மற்றும் கீழை நியூஸ் சார்பாக அவர்களைப் பற்றிய விபரங்கள் சரிபார்த்து அந்த 60க்கும் மேற்பட்ட மாற்றுதிறனாளிகளுக்கு அரிசி, பருப்பு உட்பட அனைத்து  அத்தியாவசிய பொருட்களும் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டது.

இதையடுத்து இன்று (05/05/2020) கீழக்கரை டிஎஸ்பி முருகேசன் தலைமையில் அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை மாற்று திறனாளிகள் இருக்கும் இடத்திற்கே சென்று வழங்கப்பட்டது.

இதற்க்காக கடந்த இரண்டு நாட்களாக இரவு பகல் பாராமல் கடுமையாக உழைத்த முகைதீன் இப்ராகீம், அசார், நசுரூதீன், கீழைநியூஸ் செய்தியாளர் முகம்மது ஹாஜா சுஐபு, செய்தியாளர் கார்த்திக், பாலாஜி ஆகியோருக்கு கீழை நியூஸ்- சத்தியபாதை நிர்வாகம் வாழ்த்துக்களையும், நன்றிகளையும் இத்தருணத்தில் தெரிவித்து கொள்கிறது.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!