மக்களின் நலனை கருத்தில் கொண்டே டாஸ்மாக் கடைகள் திறக்க தமிழக அரசு முடிவெடுத்துள்ளது.. அமைச்சர் ராஜேந்திர பாலாஜி..

மக்களின் நலனை கருத்தில் கொண்டே டாஸ்மாக் கடைகள் திறக்க தமிழக அரசு முடிவெடுத்துள்ளது எந்த முடிவாக இருந்தாலும் மக்கள் நலனுக்காக இருக்கும் பால்வளத்துறை அமைச்சர் கே டி ராஜேந்திர பாலாஜி பேட்டி.

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையத்தில் இராஜபாளையம் R56 பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் பணியாற்றக்கூடிய ஊழியர்கள் மற்றும் பால் உற்பத்தியாளர்கள் குழு உறுப்பினர்கள் என ஆயிரம் நபர்களுக்கு நிவாரண உதவியாக 10 கிலோ அரிசியை பால்வளத் துறை அமைச்சர் கே டி ராஜேந்திர பாலாஜி வழங்கினார் வழங்கிய பின்பு செய்தியாளர் சந்திப்பின்போது. “விருதுநகர் மாவட்டத்தை பொறுத்த வரை கொரோனா பாதிப்பு குறைந்துள்ள நிலையில் சென்னையில் இருந்து வந்தவர்கள் மூலம் மேலும் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது ஆகையால் மாவட்ட நிர்வாகம் முனைப்போடு செயல்பட்டு வருகிறது.

மேலும் விருதுநகர் மாவட்டத்தில் தொழிற்சாலைகள் நிறைந்த மாவட்டமாக இருப்பதால் இந்த மாவட்டத்தில் நூற்பாலைகள் கைத்தறி விசைத்தறி பட்டாசு போன்ற தொழில் செய்யக்கூடிய வர்களுக்கு நாளை முதல் சில விதிமுறைகளுக்கு உட்பட்டு சமூக விலகலை கடைபிடித்து தொழில் செய்ய அனுமதிக்கப்படும்.

தொழிற்சாலை நடத்துபவர்களும் தொழிலாளர்களுக்கு பாதுகாப்புடன் சமூக விலகலை கடைபிடித்து தொழிற்சாலை நடத்த வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.

டாஸ்மாக் கடை 7ம் தேதி திறப்பது குறித்து கேள்வி எழுப்பியதற்கு, “என்ன செய்தாலும் அதில் ஆதரவும் இருக்கும் எதிர்ப்பும் இருக்கும் ஆகையால் அண்டை மாநிலங்களில் கர்நாடகாவில் மதுக்கடைகள் திறந்தவுடன் தமிழக அரசு உடனே திறக்க வில்லை மக்களின் நலனை காத்து மக்களுக்காகத்தான் செயல்பட்டு வருகிறார் கர்நாடகாவில் மதுக்கடைகள் திறக்கப்பட்டுள்ளது அதே போல் பாண்டிச்சேரியில் மதுக்கடைகள் திறக்கப்பட்டுள்ளது அங்கெல்லாம் சென்று இரண்டு கிலோமீட்டர் தூரம் கடந்து சென்று மதுவை வாங்கி வருவதால் சில போலியான மதுபானங்கள் உள்ள வர வாய்ப்புள்ளதால் அதை தடுப்பதற்காக தான் முதல்வர் டாஸ்மாக் கடையை திறக்க முன்வந்துள்ளார் மக்களின் நலன் காக்கவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என அமைச்சர் கே டி ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார்.

மேலும் விழாவில் சமூக விலகலை கடைபிடிக்காமல் மொத்தமாக நின்ற கட்சி நிர்வாகிகள் இதனால் சமூக தொற்று பரவும் அபாயம் உள்ளதாக சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்தனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

புனித ரமலான் வாழ்த்துக்கள்..