இராமநாதபுரம் மாவட்டம் தொண்டி சுல்தான் மகன் சதாம் உசைன். கடந்த வாரம் இவர், தினையத்தூர் ஸ்ரீ அம்மன் மருந்தகத்தில் வாங்கிய போதை மாத்திரைகளை விழுங்கி உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதனையடுத்து தொண்டி காவல் சார்பு ஆய்வாளர் சரவணன், திருவாடானை அரசு மருத்துவர் மணிமுடி தலைமையில் போலீசார் அந்த மருந்தகத்தை கண்காணித்தனர். அப்போது தொண்டி முகமது சியாத், முகமது பயாஸ் ஆகியோர் அதிக வீரியம் கொண்ட தூக்க மாத்திரை 2 அட்டை, ரூ.ஆயிரத்துக்கும், போதை மிகுந்த டானிக் ஒன்று ரூ.150 வீதம் 55 பாட்டில்கள் ரூ. 8,250 க்கு, சட்ட விரோதமாக டாக்டரின் பரிந்துரை சீட்டின்றி மருந்து வாங்கிய போது அவ்விரு வாலிபர்கள், மருந்தக உரிமையாளர் மாரி மகன் பிரபு ஆகியோரை பிடித்தனர். பணம், மருந்துகளை கைப்பற்றிய தொண்டி போலீசார் 3 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். முகமது சியாத்திடமிருந்து கால் கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
தீவிர சிகிச்சையில் இருந்த சதாம் உசைன் நேற்று முன் தினம் மாலை இறந்தார். இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
You must be logged in to post a comment.