உசிலம்பட்டி நகராட்சி சார்பில் எஸ்ஒஆா் நகர் பொதுமக்களுக்கு கபசுர பொடி வழங்கப்பட்டது.

தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அதை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனது, மேலும் வைரஸ் பரவாமல் இருக்க அரசு சார்பில் கப சுர குடிநீர் மற்றும் வைட்ட மின் சக்தி அதிகரிக்கும் மாத்திரைகள் வழங்கப்பட்டு வருகின்றன,

இதன் ஒரு பகுதியாக மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் தடை செய்யப்பட்ட SOR நகர் பொதுமக்களுக்கு கொரோனா வைரஸ் நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட கப சுர பொடி நகராட்சி மற்றும் உசிலம்பட்டி அரசு சித்த மருத்துவமணை டாக்டர் தீபா, நாகராஜன், முன்னிலையில் உசிலம்பட்டி நகராட்சி ஆணையாளர் அழகேஸ்வரி, மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் அகமது கபீர், சரவன பிரபு ஆகியோர் ஒவ்வொரு வீடாக சென்று SOR நாகர் பொதுமக்களுக்குக் கப சுர பொடிகள் வழங்கினர், ஒத்துழைப்பாக எஸ்ஐ மதுரை பாண்டியன், நகராட்சி பரப்புரை மேற்பார்வையாளர் பாண்டி, மற்றும் காவலர்கள் நகராட்சி ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

உசிலை சிந்தனியா

புனித ரமலான் வாழ்த்துக்கள்..