இராமநாதபுரம் கேணிக்கரை போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரபு தலைமையில் போலீசார் ரோந்து சென்றனர். வாலாந்தரவை ஏந்தல் பகுதியில் உள்ள இறால் பண்ணை அருகே சந்தேகத்திற்கிடமாக நின்ற சிலர் போலீசாரை கண்டதும் தப்பி ஓடினர். போலீசார் அவர்களை விரட்டிச் சென்றபோது, அப்பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்ச மூலப்பொருட்களுடன் நிறுத்தப்பட்டிருந்த கார் மற்றும் இரு சக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர். அங்கு நின்ற 3 பேரை பிடித்தனர்.
விசாரணையில், பெருங்குளம் ஹரிபிரதாபன் 42, தென்காசி மாவட்டம் கீழ பாவூர் முப்பிடாதி 37, மதுரை சம்பைகுளம் முரளி 37 ஆகியோர் கள்ளச்சாராயம் காய்ச்ச முயன்றது தெரிந்தது. இவர்களிடமிருந்து கார், இரு சக்கர வாகனம், குக்கர் காஸ் சிலிண்டர், 25 லிட்டர் சாராய கேன், 5 லிட்டர் சாராய கேன், 1 லிட்டர் சாராய ஊறல் பறிமுதல் செய்தனர். மூன்று பேரையும் கைது செய்த போலீசார், தப்பியோடிய பெருங்குளம் செல்வராஜ் உள்பட 3 பேரை தேடி வருகின்றனர்.
You must be logged in to post a comment.