கீழக்கரை சதக் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வரும் ஜனார்த்தன வேலன் இன்று முள்ளுவாடி அருகே இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தபோது ரோட்டின் குறுக்கே நாய் வந்ததால் நிலைதடுமாறிய வாகனம் மற்றொரு வாகனத்தில் மோதி படுகாயமடைந்தார்.
விபத்தில் காயமடைந்த ஜனார்த்தனை மீட்டு உடனடியாக இராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்கள். சிகிச்சை பலனளிக்காமல் இறந்துவிட்டதாக தெரியவருகிறது. விபத்து குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
You must be logged in to post a comment.