செங்கம் அருகே சமூக இடைவெளி பின்பற்றி பணியாற்றி வரும் பெரியகோளாப்பாடி ஊராட்சிமன்ற தலைவர்..
செங்கம் அடுத்த பெரியகோளாப்பாடி ஊராட்சியில் சுபகர குடிநீர் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த பெரியகோளாப்பாடி ஊராட்சியில் சுபகர குடிநீர் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.
நிகழ்விற்கு பெரியகோளாப்பாடி ஊராட்சி மன்றத் தலைவர் ஆத்தங்கரையாள் ஜெயராமன் தலைமை தாங்கினார். மேல் பெண்ணாத்தூர் ஆயுர்வேத மருத்துவர் புனிதவதி , 300க்கும் மேற்பட்ட கிராமப்புற மக்களுக்கு சமூக இடைவெளியுன் கபசுர குடிநீர் வழங்கி நோய்த்தடுப்பு முறைகளை விழிப்புணர்வு ஏற்படுத்தினார். நிகழ்வின்போது ஊராட்சிமன்றத் துணைத் தலைவர், கிராம செவிலியர்கள் காந்தா, அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர். ஊராட்சி மன்ற தலைவர், அனைவரிடமும் சமூக இடைவெளி விலகலோடு பணி மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.
செய்தியாளர், செங்கம் சரவணகுமார்
You must be logged in to post a comment.