கடையநல்லூர் நகராட்சி பள்ளி ஆசிரியர்கள் சார்பில் மாணவர்களின் குடும்பங்களுக்கு நிவாரண உதவி வழங்கல்..
கடையநல்லூர் பேட்டை நகராட்சி பள்ளியில் படிக்கும் மாணவர்களின் குடும்பத்திற்கு தேவையான நிவாரண உதவிகளை ஆசிரியர்கள் வழங்கினர்.
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் பேட்டை நகராட்சி நடுநிலைப் பள்ளியில் பயிலும் மாணவ மாணவியர் குடும்பங்களுக்கு பள்ளி ஆசிரியர்கள் தமிழ்ச்செல்வி, விஜய நிர்மலா, லட்சுமணன், துரையம்மாள், சாமி, நர்மதா, சுபசெல்வி ஆகியோர் சார்பில் அப்பள்ளியில் படிக்கும் 50க்கும் மேற்பட்ட மாணவர்களின் குடும்பங்களுக்கு அரிசி 10 Kg,காய்கறிகள் 4 கிலோ, தக்காளி 500 கிராம், பல்லாரி 500 கிராம், கத்தரிக்காய் 500, கிராம் வெண்டை 500கிராம், முட்டைக்கோஸ் 500 கிராம், காரட் 250 கிராம், சவ் ஜவ் 500 கிராம், புடலை 400 கிராம், மிளகாய் 100 கிராம், வாழக்காய் 1, மல்லி, கருவேப்பிலை ரூ5, காய்கறிகள் 4 கிலோகிராம் மற்றும் அரிசி 10 கிலோ மொத்தம் 14 கிலோ மதிப்பிலான தொகுப்பு 50 மாணவர்களின் குடும்பத்திற்கு வழங்கப்பட்டு கொரானோ தொற்று தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
மேற்படி நிகழ்வில் கடையநல்லூர் கிராம நிர்வாக அலுவலர் தமிழ்ச்செல்வி நகராட்சி ஆரம்பப் பள்ளி தலைமையாசிரியர் மணிமாறன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
செய்தியாளர் அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.