கரூரிலிருந்து வெளி மாவட்டங்களுக்கு மற்றும் வெளிமாநிலங்களுக்கும் செல்ல, போக்குவரத்து அனுமதியானது சென்னை E-PASS கட்டுப்பாட்டு அறையின் மூலமே வழங்கப்படும் – மாவட்ட ஆட்சித்தலைவர் த.அன்பழகன்.இஆப.,தகவல்..

கரூரிலிருந்து வெளி மாவட்டங்களுக்கு மற்றும் வெளிமாநிலங்களுக்கும் செல்ல, போக்குவரத்து அனுமதியானது சென்னை E-PASS கட்டுப்பாட்டு அறையின் மூலமே வழங்கப்படும் – மாவட்ட ஆட்சித்தலைவர் த.அன்பழகன்.இஆப.,தகவல்..

இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக தமிழகஅரசு பிறப்பித்துள்ள 144 தடை உத்தரவு தொடர்ந்து நடைமுறையில் உள்ளதால் திருமண நிகழ்ச்சி, இறப்பு மற்றும் அவசர மருத்துவ காரணங்களுக்காக வாகன அனுமதி மற்றும் பயண அனுமதி கோரும் பொதுமக்கள் https://tnepass.tnega.org என்ற இணையதளத்தின் வழியாக உரிய ஆவணங்களை பதிவேற்றம் செய்து விண்ணப்பிக்கலாம். தமிழகமெங்கும் 144 தடைஉத்தரவு பிறப்பிப்பதற்கு முன்னர் நிச்சயிக்கப்பட்ட திருமணங்களுக்கு மட்டும் பயண அனுமதி வழங்கப்படும். மேலும், மணமக்களின் நெருங்கிய உறவினர்களுக்கு மட்டும் திருமணத்திற்கான பயண அனுமதி வழங்கப்படும். திருமணத்திற்காக விண்ணப்பிக்கும் நபர்கள் கட்டாயமாக திருமண அழைப்பிதழை பதிவேற்றம் செய்ய வேண்டும். இறப்பு காரியங்களுக்கு பயண அனுமதி கோரும் விண்ணப்பதாரர்கள் இறப்பு நடைபெற்ற இடத்திலிருக்கும் மருத்துவரிடம் சான்று அல்லது அக்கிராமத்தின் கிராம நிர்வாக அலுவலரிடம் பெறப்பட்ட கிராம நிர்வாக அலுவலரின் சான்று அல்லது இறப்பு சான்று இவற்றில் ஏதேனும் ஒன்றை கட்டாயமாக இணைய விண்ணப்பத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். அவசர மருத்துவ காரணங்களுக்காக பயண அனுமதி கோரும் விண்ணப்பதாரர்களுக்கு சிகிச்சை பெறுபவருடன் அவருக்கு உதவியாளர் ஒருவருக்கு மட்டும் பயண அனுமதி வழங்கப்படும். விண்ணப்பதாரர் சமீபத்தில் நோயாளிக்கு வழங்கப்பட்ட மருத்துவ சான்றினை இணையதள மனுவில் பதிவேற்றம் செய்ய வேண்டும். அனைத்து கடைகள், நிறுவனங்கள், தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள், தொழிற்சாலைகளும் தங்களது ஊழியர்களின் போக்குவரத்திற்கு இணையதளம் வாயிலாக அனுமதி கோரும்போது நிறுவனத்தின் GST/RoC பதிவு சான்று மற்றும் உத்யோக் ஆதார் ஆகியவற்றினை ஆதாரங்களாக பதிவேற்றம் செய்ய வேண்டும். அனுமதி பெறும் நிறுவனங்கள் கொரோனா தொற்று பரவல் தடுப்பு குறித்து அரசால் அவ்வப்போது வழங்கப்படும் வழிகாட்டுதல்களை தவறாது கடைபிடிக்க வேண்டும். அனைத்து சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள், தகவல் தொழில்நுட்பம் மற்றும் அதை சார்ந்த நிறுவனங்களுக்கான அனுமதி கரூர் மாவட்ட தொழில்மைய பொது மேலாளரால் வழங்கப்படும். இதர கட்டுமானம் தொடர்பான அனுமதி மற்றும் கரூர் மாவட்ட எல்லைக்குள் திருமணம், இறப்பு மற்றும் மருத்துவம் தொடர்பான போக்குவரத்து அனுமதி மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் நேர்முக உதவியாளர்(பொது) அவர்களால் வழங்கப்படும். கரூரிலிருந்து வெளி மாவட்டங்களுக்கு மற்றும் வெளிமாநிலங்களுககுச் செல்ல போக்குவரத்து அனுமதியானது சென்னை e-pass கட்டுப்பாட்டு அறையின் மூலமே வழங்கப்படும். இவ்வாறு கரூர் மாவட்ட ஆட்சித்தலைவர்  தெரிவித்துள்ளார்.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..