5
பழனி அருகே உள்ள அமரபூண்டியில் நலிவடைந்த குடும்பங்களுக்கு காப்பான் அறக்கட்டளையின் சார்பாக நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டது..
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள அமரபூண்டி கிராமத்தில் கொரோனா தோற்று அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது அதன் காரணமாக கிராமத்தில் நலிவடைந்த குடும்பத்தினர் பலரும் உணவுப் பொருட்களான அத்தியாவசியப் பொருட்கள் வாங்குவதில் மிகவும் சிரமப்பட்டு வந்ததை அறிந்து இன்று காப்பான் அறக்கட்டளையின் நிறுவனர் தலைவர் ஒய் .பி. ரபீக், தலைமையில் அனைத்து சமுதாய மக்களுக்கு அரிசி மளிகை பொருட்கள் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு இன்று வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் அறக்கட்டளையின் பல நிர்வாகிகள் கலந்து பொதுமக்களுக்கு இலவச நிவாரணப் பொருட்களை வழங்கினார்.
திண்டுக்கல், பக்ருதீன்
You must be logged in to post a comment.