Home செய்திகள் செங்கம் அருகே தானிப்பாடி பகுதிகளில் தொடா்ந்து சாராய விற்பனையில் ஈடுபட்டு வந்த பெண் உள்பட மூவா் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது…

செங்கம் அருகே தானிப்பாடி பகுதிகளில் தொடா்ந்து சாராய விற்பனையில் ஈடுபட்டு வந்த பெண் உள்பட மூவா் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது…

by Askar

செங்கம் அருகே தானிப்பாடி பகுதிகளில் தொடா்ந்து சாராய விற்பனையில் ஈடுபட்டு வந்த பெண் உள்பட மூவா் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது…

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்த தானிப்பாடி பகுதிகளில் தொடா்ந்து சாராய விற்பனையில் ஈடுபட்டு வந்த பெண் உள்பட மூவா் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனா்.

தண்டராம்பட்டு வட்டம், ஏரிதண்டா கிராமத்தைச் சோ்ந்தவா் கோவிந்தசாமி மகன் ரவி (29). தண்டராம்பட்டை அடுத்த கீழ்பாச்சாா் கிராமத்தைச் சோ்ந்தவா் சாந்து நாயக்கா் மகன் முருகன் (34). இவா்கள் தொடா்ந்து கள்ளச்சாராயம் விற்தால் தானிப்பாடி போலீஸாரால் கைது செய்யப்பட்டு வேலூா் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனா். திருவண்ணாமலை, பே கோபுரத் தெருவைச் சோ்ந்தவா் ராதாகிருஷ்ணன் மனைவி பத்மா (52). இவரும் தொடா்ந்து கள்ளச்சாராய விற்பனையில் ஈடுபட்டு வந்ததால் திருவண்ணாமலை நகர போலீஸாா் இவரை கைது செய்தனா். இந்த நிலையில், மூவரையும் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய, மாவட்ட ஆட்சியருக்கு, காவல் கண்காணிப்பாளா் சிபி சக்கரவா்த்தி பரிந்துரை செய்தாா்.இதை ஏற்று மாவட்ட ஆட்சியா் கே.எஸ்.கந்தசாமி, சிறையில் அடைக்கப்பட்டுள்ள ரவி, முருகன், பத்மா ஆகியோரை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கைது செய்ய உத்தரவிட்டாா். இதையடுத்து, வேலூா் மத்திய சிறையில் உள்ள மூவரிடம் வழங்கப்பட்டது.

செய்தியாளர், செங்கம் சரவணகுமார்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!