6
தஞ்சையில் 17 பேர்களும், சென்னையில் 11 பேர்களும், திருவள்ளூர் மற்றும் தென்காசியில் தலா 5 பேர்களும், திருவாரூரில் 4 பேர்களும், திருச்சி மற்றும் வேலூரில் தலா 3 பேர்களும், தேனி, நாகை, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் தலா இருவரும் கரூர், திண்டுக்கல் மாவட்டங்களில் தலா ஒருவரும் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தஞ்சையில் மட்டும் 17 பேர் பாதிக்கப்பட்டு முதலிடம் பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதனையடுத்து தமிழகத்தில் சென்னையில் 228 பேர்களும், கோவையில் 127 பேர்களும், திருப்பூரில் 80 பேர்களும், ஈரோட்டில் 70 பேர்களும், திண்டுக்கல்லில் 66 பேர்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதும், பெரம்பலூர் மாவட்டத்தில் ஒரே ஒருவர் மட்டுமே கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது
You must be logged in to post a comment.