Home செய்திகள் மதுரை-தூய்மை பணியாளர்களுக்கு மருத்துவ பரிசோதனை

மதுரை-தூய்மை பணியாளர்களுக்கு மருத்துவ பரிசோதனை

by mohan

மதுரை மாநகராட்சி கொரோனா தடுப்பு பணியாக சாத்தமங்கலம் நகர்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் தூய்மை பணியாளர்களுக்கு மருத்துவ பரிசோதனை இன்று நடைபெற்றது.இதில் மதுரை மாநகராட்சி கொரோனா தடுப்பு பணியாக சாத்தமங்கலம் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் தூய்மை பணியாளர் களுக்கு மருத்துவ பரிசோதனை செய்வதை ஆணையாளர் விசாகன் , தலைமையில் மாண்புமிகு கூட்டுறவுத் துறை அமைச்சர்  செல்லூர் கே . ராஜீ  ஆய்வு மேற்கொண்டார் .தூய்மை பணியில் ஈடுபடும் தூய்மை பணியாளர்கள் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்பதற்காக அவர்களுக்கும் எந்த வித தொற்றும் ஏற்பட கூடாது என்பதற்காகவும் முழு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்படுகின்றன.இரத்த அழுத்தம், நீரிழிவு,காய்ச்சல் போன்ற பரிசோதனைகளும்,ஒவ்வொரு நாளும் அப்பகுதிக்கு உட்பட்ட நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டுள்ளன.மேலும் தூய்மை பணியாளர்களுக்கு தேவையான அனைத்து பாதுகாப்பு உபகரணங்களும் வழங்கப்பட்டுள்ளன.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!