உங்கள் உயிரை பாதுகாக்கத் தான் நாங்கள் பாடுபட்டுக்கொண்டு உள்ளோம், தயவு செய்து புரிந்துக் கொண்டு ஒத்துழைப்பு தாருங்கள்:கடமலைக்குண்டு காவல் ஆய்வாளர் திரு.சுரேஷ்குமார்…
கடமலைக் குண்டு காவல் வட்டஆய்வாளர் திரு.சுரேஷ்குமார் அவர்கள் வருச நாடு மெயின் ரோட்டில் உள்ள ஸ்டேட் பேங்க் முன்பு வருசநாடு கிராம முதியோர்கள் முதியோர் ஓய்வு ஊதியம் பெறுவதற்காக கூடியிருந்த பல முதியோர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் கொரோனா தொற்று தடுப்பு சம்பந்தமாக அறிவுரை வழங்கினார், குறிப்பிட்ட இடைவெளி விட்டு நின்று உதவி தொகை பெற்றுச் செல்ல அறிவுறுத்தியதோடு மட்டும் அல்லாமல் கொரோனா தொற்று தடுப்பு சம்மந்தமாக கடைபிடிக்க வேண்டிய சுகாதார வழிமுறைகளை அழகாக எடுத்துக் கூறினார்.மேலும் அங்கே கூடியிருந்த பொதுமக்களுக்கு முககவசம் இலவசமாக வழங்கி விழிப்புணர்வை ஏற்படுத்தி உரையாற்றினார்.
You must be logged in to post a comment.