ராமநாதபுரத்தில் தங்கள் வீடுகளில் ஆட்சியர், எம்எல்ஏ குடும்பத்தார் விளக்கேற்றினர்

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளில் நம் அனைவரின் ஒற்றுமையை உணர்த்தும் வகையில் ஏப்ரல் 5 இரவு 9 மணிக்கு வீட்டு விளக்குகளை அணைத்து நாடெங்கும் அகல் விளக்கு, மெழுகுவர்த்தி தீபம் ஏற்ற பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்தார். இதன்படி ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவ ராவ் தனது குடும்பத்தாருடன் அகல்விளக்கு ஏற்றி ஒளிரச் செய்தார்.இதே போல் ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.மணிகண்டன் தனது வீட்டு வாசல் முன் எண்ணெய் தீபம் ஏற்றி, குடும்ப உறுப்பினர்கள் கைகளில் மெழுகுவர்த்தி தீபம் ஏந்தினர். மாவட்ட அதிமுக., அவைத்தலைவர் செ.முருகேசன் உடன் உள்ளார்.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..